அதிக ஆபத்தான மூன்றாம் நாடுகளின் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கம்! பிரித்தானியா அதிரடி அறிவிப்பு
'அதிக ஆபத்தான மூன்றாம் நாடுகள்' பட்டியலிலிருந்து பிரித்தானியா பாகிஸ்தானை நீக்கியுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ டுவிட்டரில் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.
நிதி நடவடிக்கை செயற்குழு பரிந்துரையின் கீழ், பிரித்தானியா அரசாங்கம் 2021ம் ஆண்டு ஏப்ரலில் அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்திருந்தது.
Some good news. The United Kingdom has officially removed Pakistan from its list of ‘High Risk Third Countries’ following our early completion of FATF action plans. ?? ? ?? pic.twitter.com/clcGHy5771
— BilawalBhuttoZardari (@BBhuttoZardari) November 14, 2022

அதிக ஆபத்துள்ள மூன்றாம் நாடுகள்
இந்த நிலையில், "அதிக ஆபத்துள்ள மூன்றாம் நாடுகள்" பட்டியலில் இருந்து பாகிஸ்தான், நிகரகுவா ஆகிய நாடுகளை பிரித்தானியா அரசு நீக்கியுள்ளது.

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போரிடுவதில் பாகிஸ்தானின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வரவேற்கப்படுவதாக நிதி நடவடிக்கை செயற்குழு கூறியுள்ளது.
பாகிஸ்தான் பணமோசடி மீதான ஆசிய-பசிபிக் குழுவுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று பிரித்தானியா அரசு கருவூலம் வெளியிட்டுள்ள ஆலோசனை அறிவிப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam