ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா மீண்டும் இணைந்தது!
ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியின் போது, சுமார் மூன்று வருடங்களுக்கு முன், ஐக்கிய நாடுகளுக்கான நிறுவனத்தின் மனித உரிமை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்தது.
அத்துடன், மனித உரிமை ஆணைக்குழு பாகுபாட்டுடன் இயங்குவதாக அமெரிக்கா குற்றம்சுமத்தியது.
இந்நிலையில், தற்போது மனித உரிமை ஆணைக்குழு 18 உறுப்பு நாடுகளை புதியதாக தெரிவு செய்துள்ளது. இதில் அமெரிக்காவும் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
குறித்த 18 நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan