ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா மீண்டும் இணைந்தது!
ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியின் போது, சுமார் மூன்று வருடங்களுக்கு முன், ஐக்கிய நாடுகளுக்கான நிறுவனத்தின் மனித உரிமை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்தது.
அத்துடன், மனித உரிமை ஆணைக்குழு பாகுபாட்டுடன் இயங்குவதாக அமெரிக்கா குற்றம்சுமத்தியது.
இந்நிலையில், தற்போது மனித உரிமை ஆணைக்குழு 18 உறுப்பு நாடுகளை புதியதாக தெரிவு செய்துள்ளது. இதில் அமெரிக்காவும் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
குறித்த 18 நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 1 மணி நேரம் முன்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மரணம்.. மறுபிறவிக்காக தற்கொலை அல்ல! கொல்லப்பட்டது அம்பலம் News Lankasri

பிரித்தானிய ஏரி ஒன்றில் மர்ம உயிரினம்... சிறுபிள்ளைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் எச்சரிக்கை News Lankasri
