ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா மீண்டும் இணைந்தது!
ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியின் போது, சுமார் மூன்று வருடங்களுக்கு முன், ஐக்கிய நாடுகளுக்கான நிறுவனத்தின் மனித உரிமை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்தது.
அத்துடன், மனித உரிமை ஆணைக்குழு பாகுபாட்டுடன் இயங்குவதாக அமெரிக்கா குற்றம்சுமத்தியது.
இந்நிலையில், தற்போது மனித உரிமை ஆணைக்குழு 18 உறுப்பு நாடுகளை புதியதாக தெரிவு செய்துள்ளது. இதில் அமெரிக்காவும் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
குறித்த 18 நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 10 மணி நேரம் முன்
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri