பிரித்தானியாவில் இந்திய மாணவர்கள் இருவருக்கு நடந்த சோகம்
பிரித்தானியாவில் (United Kingdom) கல்வி பயின்று வந்த இந்திய மாணவர்கள் இருவர், சுற்றுலாத்தலம் ஒன்றில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர் கடந்த புதன்கிழமையன்று (17) ஸ்கொட்லாந்திலுள்ள(Scotland) பிரபல சுற்றுலாத்தலமான கேரி (Garry) மற்றும் டம்மல் (Tummel) என்னும் இரு நதிகள் சந்திக்கும் இடத்திலுள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
நீரில் மூழ்கிய மாணவர்கள்
இதன்போது, Dundee பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுவந்த 22 வயதுடைய சான்ஹக்யா பொலிசெட்டி மற்றும் 27 வயதுடைய ஜிதேந்திரநாத் கருடூரி ஆகிய மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கியுள்ளனர்.

இந்தநிலையில், அவர்களுடைய நண்பர்கள் உடனடியாக அவசர உதவியை அழைத்தும், நீரில் மூழ்கியவர்களை உயிருடன் மீட்கமுடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உயிரிழந்த இருவருக்கும் இன்று(19) உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளப்படும் நிலையில், அவர்களுடைய உடல்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக கூறப்படுகின்றது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஒரு பக்கம் சூட்டிங், அதே நேரத்தில் ICUவில் இறந்த கணவர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகையின் சோக கதை Cineulagam
ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று சூப்பர்ஹிட் திரைப்படங்கள்... இதோ விவரம் Cineulagam
ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷ் இராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி: பிரித்தானியா அதிரடி News Lankasri