சென்னையில் சிறுவன் உட்பட்ட இருவர் மீது தாக்குதல்: பாடகர் மனோவின் மகன்மார் ஆந்திராவுக்கு தப்பி ஓட்டம்
16 வயது சிறுவன் உட்பட்ட இரண்டு பேர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்படும் தென்னிந்திய பாடகர் மனோவின் மகன்மார் இருவரும் ஆந்திராவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படை, ஆந்திராவுக்கு விரைந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
சென்னை, ஆலப்பாக்கம் அருகே கால்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தை சேர்ந்த சிறுவனும் மற்றுமொருவருமே மனோவின் மகன்மார் உட்பட்ட ஐந்து பேரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் குறித்து மனோவின் மகன்களுக்கு எதிரான காணொளியும் ஆதாரமாக கிடைத்துள்ளது.
இந்தநிலையில், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் பாடகர் மனோவின் மகன்மாரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஏனைய மூவரை தேடும் பணியில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri
