பதுக்கி வைத்திருந்த டீசலுடன் இருவர் கைது (PHOTOS)
மடடடக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் தனியார் ரான்போட் கம்பனியொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் வியாபாரத்துக்காக பரல் மற்றும் தண்ணீர் தாங்கியில் பதுக்கி வைக்கப்பட்டடிருந்த 1510 லீற்றர் டீசலுடன் ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகதபாலவின் ஆலோசனைக்கமைய காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நயனசிறியின் வழிகாட்டில் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ. றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்றிரவு காத்தான்குடி உமர் பள்ளிவாயல் வீதியிலுள்ள குறித்த கம்பனியினை சுற்றிவளைத்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அங்கு 7 பரல்கள் மற்றும் தண்ணீர் தாங்கி என்பவற்றில் 1510 லீற்றர் டீசலை வியாபாரத்துக்காக பதுக்கி வைத்திருந்த நிலையில் ஒருவரை கைது செய்ததுடன்,பதுக்கி வைத்திருந்த டீசலையும் மீட்டுள்ளனர்.
எரிபொருள் சேமிப்பு
குறித்த எரிபொருளை தனியார் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்து கொண்டுவந்து பதுக்கி வைத்திருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரையம்பதி பகுதியில் வியாபாரத்துக்காக பதுக்கி வைத்திருந்த 135 லீற்றர் டீசலுடன் ஒருவரை கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
மேலும்,வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 10 கட்டை நாகமடுவ பகுதியில் 200
லீற்றர் டீசலுடன் பொலிஸாரினால் நேற்று மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.