உலகை உலுக்கிய துருக்கி பூகம்பம்! உயிர்பிழைத்தவர்களை காப்பாற்றுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
உலகத்தை உலுக்கிய துருக்கி பூகம்பத்தில் உயிர் தப்பிய ஆயிரக்கணக்கானவர்கள் திறந்தவெளியில் மிக மோசமான நிலையில் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்களை தொடர்ந்தும் உயிருடன் வைத்திருப்பதில் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
மீண்டும் பாதிக்கப்படலாம்
அவர்களிற்கு உணவு எரிபொருள் மின்விநியோகம் இல்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது பேரழிவின் பின்னர் இரண்டாவது பேரழிவை சந்திக்கும் ஆபத்தில் உள்ளோம். முதல் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் இதன் காரணமாக மீண்டும் பாதிக்கப்படலாம் எனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
