கொடூரமாக தாக்குவோம்! ஈரானின் மிரட்டலை தொடர்ந்து இன்று ட்ரம்ப் வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று இரவு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஈரான் விவகாரத்தில் மிக முக்கியமான தகவல் ஒன்றை அவர் வெளியிடவுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) இது குறித்து கருத்து தெரிவிக்கையில், "ஜனாதிபதி ட்ரம்ப் இன்று இரவு உரையாற்றுவார்.
பதற்றநிலை
இதன்போது ஈரான் தொடர்பான மிக முக்கியமான தகவல்களை அவர் பகிர்ந்து கொள்வார்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க நிறுவனங்கள் மீதான ஈரானின் மிரட்டலுக்குப் பதிலடியாக, ஈரானின் எண்ணெய் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்த உத்தரவிடப்படலாம் என சர்வதேச ரீதியில் அச்சம் எழுப்பப்பட்டுள்ளது.
அல்லது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இறுதி வாய்ப்பு குறித்து அறிவிக்கப்படலாம். ஈரானியத் தலைவர்களின் மரணம் மற்றும் ஈரானின் தற்போதைய பலவீனம் குறித்த இராணுவ இரகசியங்கள் வெளியாகலாம் எனவும் சர்வதேச நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri