முக்கூட்டு நோய்த் தடுப்பு திட்டம் இலங்கையில் ஆரம்பம்
இலங்கையின் முக்கூட்டு நோய்த் தடுப்பு திட்டம் (Triple Elimination) நேற்று (01) முதல் இலங்கையில் உள்ள அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளிலும் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஹெபடைடிஸ் பி வைரஸ் (Hepatitis B virus) உள்ளதா என்பதைக் கண்டறிய இரத்தப் பரிசோதனைகள் நடத்தப்படும்.
சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! இளைஞர் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலம்
உலக சுகாதார அமைப்பின் சான்றிதழ்
நாட்டில் உள்ள அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளிலும் இத்தகைய இரத்தப் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV) மற்றும் சிபிலிஸ் ஆகியவை தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுவதைத் தடுப்பதற்காக இலங்கையில் சில காலமாக இரத்தப் பரிசோதனை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV) மற்றும் சிபிலிஸ் ஆகியவை தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுவதைத் தடுப்பதில் வெற்றிகண்ட நாடு என்ற உலக சுகாதார அமைப்பின் சான்றிதழை இலங்கை 2019இல் பெற்றுக் கொண்டிருந்தது.
மேலும், இந்த நேர்மறையான நிலையைத் தொடர்ந்து பேணிவரும் நாடு என்ற உலக சுகாதார அமைப்பின் சான்றிதழையும் பாராட்டையும் இலங்கை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan