சண்முகம் குகதாசனுக்கு திருகோணமலையில் கௌரவிப்பு விழா
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசனனுக்கான கௌரவிப்பு நிகழ்வு திரியாய் தமிழ் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
திரியாய் தமிழ் மஹா வித்தியாலயத்தில் திரியாய், கட்டுகுளம், கல்லம்பத்தை, செந்தூர் ஆகிய பிரதேச மக்களால் இன்று (02) குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் பாடசாலை முதல்வர், இலங்கைத் தமிழரசுக் கட்சி மாவட்டக் கிளை உறுப்பினர், திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்க உறுப்பினர், ஊர் பொதுமக்கள், நலன்விரும்பிகள், பள்ளி ஆசிரியர்கள் , மாணவர்கள் , என பெருந்திரளானவர் பங்குபற்றியிருந்தனர்.
சம்மந்தனின் நினைவேந்தல்
இந்த நிகழ்வு மறைந்த பெருந்தலைவர் இரா. சம்மந்தனின் நினைவேந்தலுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து மங்கள விலக்கேற்றல், வரவேற்பு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |