மோசடி வழக்கில் நீதிபதி இளஞ்செழியனிடம் சிக்கிய சட்டத்தரணி

Sri Lanka Supreme Court of Sri Lanka
By Dhayani Jun 30, 2022 10:46 PM GMT
Report

திருகோணமலையில் காலம் சென்ற சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவரின் பெயரில் மோசடியாக எழுதப்பட்ட காணி உறுதி தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளார்.

திருகோணமலையில் காலம் சென்ற சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவரின் பெயரில் மோசடியாக எழுதப்பட்ட காணி உறுதி தொடர்பில் சட்டத்தரணி உட்பட இரு நபர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கு மற்றும் மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும்,மோசடியாக எழுதிய உறுதிக்கு உறுதுணையாக செயற்பட்ட சட்டத்தரணிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,பிரதம நீதியரசரால் விசேடமாக திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ள உத்தரவு 

கொழும்பு கேம்ரீஜ் வீதியில் உள்ள ராணி சட்டத்தரணியான ஜோஜ் சிட்டி என்பவருக்கு சொந்தமான உரித்தும்,உடமையும் கொண்ட திருகோணமலை,நிலாவெளி கும்பிறுபிட்டி பகுதியில் உள்ள 7 ஏக்கர் காணிக்கு இந்த மோசடி உறுதி எழுதப்பட்டுள்ளது.

மோசடி வழக்கில் நீதிபதி இளஞ்செழியனிடம் சிக்கிய சட்டத்தரணி | Trincomalee Court Judge Ilanchezhiyan S Judgment

இம்மோசடி உறுதி 22.07.1970 ஆண்டு காலம் சென்ற சிரேஸ்ட சட்டத்தரணியால் எழுதப்பட்டதாகவும், 48 வருடங்கள் காலம் தாழ்ந்து 13.12.2018 ஆம் ஆண்டு திருகோணமலை காணி பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் 22.07.1970 ஆம் ஆண்டு அதே இலக்க உறுதியொன்று நுவரெலியா ஆதனம் ஒன்றிற்கு காலம் சென்ற சிரேஸ்ட சட்டத்தரணியால் எழுதப்பட்டமையும் நீதிமன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மோசடி உறுதியின் அடிப்படையில், திருகோணமலையில் தற்சமயம் கடமையாற்றும் சட்டத்தரணியால் 19.11.2018 ஆம் ஆண்டு ஒருவருக்கு காணி உரிமை மாற்றப்பட்டுள்ளது.

நீதிபதி இளஞ்செழியனின் இறுதி தீர்ப்பு

அதன் பின்னர் 10 நாட்களின் பின்னர் 29.11.2018 ஆம் ஆண்டு குறித்த சட்டத்தரணிக்கு காணியில் ஒரு பங்கு உரித்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் 22.07.1970 எழுதப்பட்டதாக கூறப்படும் உறுதி மோசடியான காணி உறுதி எனவும்,70 ஆம் ஆண்டு Attornery-at-law என அழைப்பதில்லை Advocate (அப்புக்காத்து) எனவே அழைப்பர்.Attorney -At-Law சட்டம் 1976 இன் பின்னர் இப்பதவி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

மோசடி வழக்கில் நீதிபதி இளஞ்செழியனிடம் சிக்கிய சட்டத்தரணி | Trincomalee Court Judge Ilanchezhiyan S Judgment

எனவே இது மோசடியாகும். அதேசமயம், 1970 ஆம் ஆண்டின் உறுதியில் காலம் சென்ற சட்டத்தரணி ஜனநாயக சோசலிச சிறிலங்கா குடியரசு என குறிப்பிட்டு அத்தாட்சிப்படுத்தியுள்ளதாக மோசடி உறுதியில் காணப்படுகின்றது.

1970 ஆம் ஆண்டு இலங்கை தீவுகள் என அழைக்கப்பட்டது. (ISLANDS OF CEYLON) 1970 ஆம் ஆண்டு இலங்கை சிறிலங்கா குடியரவு என அழைக்கப்படவில்லை.

காணி உறுதியில் காணப்பட்ட மோசடிகள்

இலங்கை சிறிலங்கா குடியரசு என 1972 ஆம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்டது. எனவே 1970 ஆம் ஆண்டு மோசடி உறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள சிறிலங்கா குடியரசு என குறிப்பிட்டுள்ளமை இரண்டாவது மோசடியாகும்.

1970 ஆம் ஆண்டு எழுதப்பட்டதாக கூறும் மோசடி உறுதியை 48 ஆண்டுகளின் பின் 2018 ஆம் ஆண்டு காணி பதிவகத்தில் பதிவு செய்தமை மூன்றாவது மோசடியாகும்.

எனவே மோசடி உறுதி மூலம் ராணி சட்டத்தரணி ஜோஜ் சிட்டியின் காணியில் இருந்து மோசடியாக காணியை எழுதியவர்கள், அத்துமீறி இருப்பவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறும் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மோசடி உறுதிக்கு உறுதுணையாகவிருந்து காணி துண்டையும், பெற்றுக்கொண்ட சட்டத்தரணிக்கு எதிராகவும் உயர்நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி இளஞ்செழியன் விசேடமாக குறிப்பிட்டுள்ளார்.     

மோசடி வழக்கில் நீதிபதி இளஞ்செழியனிடம் சிக்கிய சட்டத்தரணி | Trincomalee Court Judge Ilanchezhiyan S Judgment

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US