இந்திய றோட்றி கழக அங்கத்துவர்களினால் யாழில் நடப்பட்ட மரக்கன்றுகள்
இந்திய றோட்றி (Rotary) கழக அங்கத்துவர்களின் பங்குபற்றலுடன் யாழ்ப்பாணத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை பலாலி வீதியில் உள்ள மயிலிட்டி தெற்கு கட்டுவன் பகுதியில் வீதி ஓரத்தில் இன்று (22) பிற்பகல் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தனவந்திரி செயற்திட்டத்தின் தலைவர் றோட்டேரியன் தனசேகர் தலைமையில், சுன்னாகம் பாரிய றோட்டறி கழகம், இந்திய றோட்றி கழக அங்கத்துவர்கள், க்றீன் லேயர் அமைப்பு மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
உதவித் திட்டங்கள்
அத்துடன், யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர், சுன்னாகம் பாரம்பரிய றோட்றி கழகம் மற்றும் யாழ்பப்பாண கழகங்களின் ஊடாக தெரிவு செயயப்பட்ட மாணவர்கள் மற்றும் மாற்றித்திறனாளிகளுக்கும் உதவி திட்டங்கள் வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் மட்டுமல்லாது கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து அங்குள்ள மக்களுக்கும் உதவி திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |