நாட்டை மீண்டும் திறக்கும் முடிவில் மாற்றமா? வெளியாகியுள்ள புதிய தகவல்
நாட்டை மீண்டும் திறக்கும் முடிவில் மாற்றம் ஏற்படுவது தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி திங்கட்கிழமை நாட்டை மீண்டும் திறக்கும் முடிவில் மாற்றங்கள் ஏற்படலாம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை மீண்டும் திறக்கும் முடிவை எடுத்த போது இருந்த சூழ்நிலையில் தற்போது இல்லை.
மேலும், கடந்த வாரத்திலேயே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நிலவும் அபாயகரமான சூழ்நிலையில், எந்த முடிவுகளாக இருந்தாலும் கவனமாக எடுக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.