தொடருந்தில் மோதுண்டு இரு பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
அம்பலாங்கொடை தொடருந்து பாதையில் பேசிக்கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவரும், மாணவர் ஒருவரும் தொடருந்தில் மோதுண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளது .
விபத்தில் காயமடைந்தவர்கள் 17 வயதுடைய அம்பலாங்கொடையில் உள்ள இரண்டு பிரதான பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவனின் உடல்நிலை
குறித்த மாணவன் அம்பலாங்கொடை ஹிரேவத்த பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், மாணவி அம்பலாங்கொடை தெல்துவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த விபத்தில் மாணவன் பலத்த காயமடைந்துள்ளதுடன், மாணவிக்கு கீறல்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொடருந்து விபத்தில் சிக்கிய பாடசாலை மாணவன் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போது சுயநினைவின்றி இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
