மட்டு. சந்திவெளியில் வாகன விபத்து : ஒருவர் பலி (Video)
மட்டக்களப்பு, சந்திவெளியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் பலத்த காயமடைந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
செங்கலடி பிரதேசத்தில் இருந்து வாழைச்சேனை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியுடன் எதிரே வந்த லோரி நேருக்கு நேர் மோதியதனால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது 4 பிள்ளைகளின் தந்தையான கறுவாக்கேணியைச் சேர்ந்த து.விஜயநாதன் (வயது 51) என்பவரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு. போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
சந்திவெளி பொலிஸார் குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.



இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
