அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்
கடந்த 2020 இல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நடைபெறவில்லை.
இந்நிலையில்,ஜப்பானிலேயே பலத்த எதிர்ப்புக்குப் பிறகு இன்று (ஜூலை 23) ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சிகள் அதிகாரபூர்வதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.
200-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் சார்பாக சுமார் 11,300-க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள், 33 விளையாட்டுகளைச் சேர்ந்த 339 நிகழ்வுகளில் போட்டியிட இருக்கின்றனர்.
அகதிகள் அணி சார்பாக 12 விளையாட்டுகளில் 29 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 2016 பிரேசிலின் ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்த எண்ணிக்கை 10 ஆக இருந்தது.
இந்த 32 வது ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏந்தி 6 முறை உலகச் சாம்பியனான குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் மற்றும் ஆண்கள் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத்சிங் கம்பீரமாக நடைபோட்ட காட்சியும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam