அர்ச்சுனாவின் முகப்புத்தக பதிவை கேலி செய்த அமைச்சர்
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கும் (Ramanathan Archchuna) அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிற்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தனது உரை நேரத்தின் போது, அண்மையில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை தொடர்பில் கருத்து தெரிவித்து கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, இடையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், குறுக்கிட்டு பேசிய போது, இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ” உங்களை போல், முகப்புத்தகத்தில் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு எங்களாலும் படம் காட்ட முடியும். ஆனால் நாங்கள் அதை செய்வதில்லை” என சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர், தனக்கான உரை நேரத்தை பெற்று கொண்டு பின்னர் உரையாற்றுமாறும் அவர் அர்ச்சுனாவை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், எதிர்கட்சி தலைவரிடம் உங்களுக்கான நேரத்தை பெற்று கொண்டு பேசுங்கள் எனவும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam