கொழும்பில் நீதி அமைச்சிற்கு முன்பாக திரண்ட இளைஞர் யுவதிகள்! பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு (Video)
கொழும்பில் நீதி அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தினை சோசலிச இளைஞர்கள் அமைப்பு முன்னெடுத்து வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டுள்ளதுடன், எக்ஸ்பிரஸ்பேரள் கப்பலால் கிடைக்கும் நட்டயீட்டினை கொள்ளையடிப்பதற்கு இடம் வழங்காதிருப்போம் என வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர்ந்தும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கொழும்பு - சங்கராஜாமாவத்தையில் நீதி அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எக்ஸ்பிரஸ்பேரள் கப்பலால் கிடைக்கும் நட்டயீட்டினை கொள்ளையடிப்பதற்கு இடம் வழங்காதிருப்போம் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
எனினும் இதுவரையில் அப்பகுதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் யாரும் வருகை தரவில்லை எனவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.








6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
