இலங்கையில் மற்றுமொரு கட்டண அதிகரிப்பு தொடர்பில் அறிவிக்கப்பட்டது
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து விலை அதிகரிப்புகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 80 ரூபாவாகவும், மேலதிக ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 70 ரூபாவாகவும் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான சுதில் ஜயருக் மேலும் கூறுகையில்,
எரிபொருள் விலைகள் 350 ரூபாவைத் தாண்டும் வரை அறிவிக்கப்பட்ட விலைகள் நிலையானதாக இருக்கும்.
நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு விலை அதிகரிப்பு அவசியமானது.
அதிகரித்து வரும் செலவீனங்களுடன் ஒப்பிடுகையில் பொதுமக்களுக்கு நியாயமான விலையேற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்