பொலிஸ் மா அதிபர் பதவியில் வெற்றிடம்: கடமைகளை செய்ய மூவர் நியமனம்
இலங்கையில் மூன்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களுக்கு பிரதி பொலிஸ் மா அதிபரின் கடமைகளை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விஜேசேகர, பதுளையில் கடமையாற்றும் வெதமுல்ல மற்றும் கொழும்பு தெற்கை சேர்ந்த மாரப்பன ஆகியோருக்கே இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இலங்கையில் புதிய பொலிஸ் மா அதிபரின் நியமனம் இன்னும் நிரப்பப்படாமையால், பொலிஸ் மா அதிபர் பதவியில் வெற்றிடம் தொடர்கிறது.

நிர்வாக சிக்கல்கள்
ஏற்கனவே மூன்று தடவைகளாக சேவை நீடிப்பை பெற்று வந்த பொலிஸ் மா அதிபர் சிடி விக்கிரமரட்னவுக்கு மீண்டும் சேவை நீடிப்பு வழங்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
எனினும் இதுவரை இலங்கையின் ஜனாதிபதி இது தொடர்பில் எவ்வித தீர்மானங்களையும் அறிவிக்கவில்லை.
பொலிஸ் மா அதிபர் பதவிக்கான நியமனங்களை மேற்கொள்வதில் ஏற்பட்ட நிர்வாக சிக்கல்களே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 13 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri