தேரர் ஒருவரின் மோசமான செயல் : பொலிஸார் வெளிப்படுத்திய தகவல்
மாணவர்கள் மூவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குருவதோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவர்களில் ஒருவர் ஒரு வாரமாக பாடசாலைக்கு வராததால் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
ஆசிரியர் வழங்கிய தகவல்
வகுப்பின் வகுப்பு ஆசிரியர் இது குறித்து அதிபருக்கு தகவல் அளித்துள்ளார். அதன் பின்னர் இந்தச் சம்பவம் தெரியவந்தது.

சந்தேகத்திற்குரிய தேரர், இந்த மாணவன் உட்பட மூன்று மாணவர்கள் வருவதை பார்த்து, ஒரு காரில் வந்து, பணத்தைக் காட்டி அழைத்துச் சென்று, அவர்களை துஷ்பிரயோகம் செய்து, பின்னர் பாடசாலை மூடப்பட்டதும் அவர்களை மீண்டும் அழைத்து வந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர்.
ஒரு சந்தர்ப்பத்தில், ஒரே நேரத்தில் இரு மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொற்றோர்க்கு தெரியாத விடயம்
அங்குருவதோட்டை பொலிஸாருக்கு தகவல் அளித்த பின்னர், இது குறித்த அனைத்து தகவல்களும் கவனமாக சேகரிக்கப்பட்டு, குழந்தைகளின் பெற்றோரிடம் இது குறித்து விசாரித்தபோது, குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதாகவும், இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சந்தேக நபரான தேரர் விகாரைக்கு வரும் புதிய துறவிகளுக்கு பணம் கொடுத்து அவ்வப்போது துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும், புதிய துறவிகள் அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்து ஆபரணங்கள் மற்றும் டொப்பி சாக்லேட்டுகளை வாங்குவதற்காக மாதத்திற்கு கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் செலவழித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |