உள்ளூர் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: மூவர் கைது
திருகோணமலை - குச்சவெளி, புறாமலை தீவுக்கு செல்லும் உள்ளூர் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய படகு சேவை உரிமையாளர்கள் மூவரை கைது செய்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு , தெகிவளை பகுதிகளில் இருந்து புறா தீவுக்கு சுற்றுலா செய்ய இருந்த சுற்றுலாப் பயணிகள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய 60 , 40 வயது மற்றும் 45 வயது படகு உரிமையாளர்களையே இவ்வாறு குச்சவெளி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா பயணி
குறித்த தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவருக்கு காயமடைந்த நிலையில் அவர் நிலாவளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பி உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இச் சம்பவம் கடந்த 27 ஆம் திகதி மாலை இடம் பெற்றுள்ளதுடன் இது சம்பந்தமான நடவடிக்கையை 28ஆம் திகதி எடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை 29 ஆம் திகதி காலை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதாகவும், இதன்போது ஒருவர் கடுமையான இருதய நோயாளி என தெரிவித்து அவருக்கு சரீர பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் மற்றும் இருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |