படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றவர்கள் நாடு கடத்தப்பட்டனர்
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று இலங்கைப் படகுப் பயணிகளை அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர்.
அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ் முதல் தடவையாக இலங்கைப் படகுப் பயணிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் தினத்தில் அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் இலங்கையர்கள் பிரவேசித்த காரணத்தினால், இந்த சம்பவம் தொடர்பில் லிபரல் கட்சி பிழையான பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளதாக தொழிற்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் நாட்டுக்குள் பிரவேசிப்பவர்கள் நாடு கடத்தப்படுவர் என்ற கொள்கையில் எவ்வித மாற்றங்களும் கிடையாது என அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri

நடிகர் சிவாஜிகணேசன் சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை! பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் வழக்கு News Lankasri

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri

வக்ர சனியால் 6 மாதங்களுக்கு பேரழிவு காத்திருக்கு! இந்த 5 ராசிக்கும் எச்சரிக்கை - தப்பிக்க சக்திவாய்ந்த சனி மந்திரம் Manithan
