ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு தேரர் விடுத்துள்ள எச்சரிக்கை
ஆளுநர் செந்தில் தொண்டமான் பதவியை பொறுப்பேற்ற குறுகிய காலப்பகுதிக்குள் திருகோணமலை மாவட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றதாக திம்பிரிவெவ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பொல்லேங்கடுவ உபரத்னநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
இலுப்பைக்குளம், பொரலுகந்த ரஜமகா விகாரை விடயத்தில் ஆளுநர் மேற்கொண்ட தன்னிச்சையான தீர்மானங்கள் இனங்களுக்கு இடையில் வீண் பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் விகாரை அமைக்கும் விவகாரத்தில் தான்தோன்றித்தனமாக தீர்மானங்களை எடுப்பது இனமுறுகலுக்கு வழிவகுக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் விகாரையின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு ஆளுநர் பூரண ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
