விடுதலைப் புலிகள் நினைத்தால் அழித்திருக்கலாம்! உண்மையை அம்பலப்படுத்தும் தேரர் - செய்திகளின் தொகுப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் தனித்திருக்கும் போது எந்தவொரு பௌத்த கோவில்களும் அழிக்கப்படவில்லை என யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.
எமது செய்திசேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கின்ற மக்களுக்கு உண்மை தெரியாது. அது தெரிந்த ஒரேயொரு நபர் நான் மட்டும் தான். நான் இந்த கோவிலை விட்டு எங்கும் போனதில்லை. தமிழ் மக்கள் எல்லோரும் என்னுடன் தான் இருந்தார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான மேலும் பல தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,