வவுனியாவில் வயல் காவலுக்குச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு(photos)
Vavuniya
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Death
By Thileepan
வவுனியா - புளியங்குளம், புதூர் பகுதியில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்றைய தினம் (15.04.2023 ) இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் இளைஞரைத் தேடிச்சென்ற போது வயல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு தகவல் அறிவிப்பு
இந்த சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஜெகநாதன் கேஜிதன் என்பவராவார்.

பொலிஸார் மேலதிக விசாரணை
மேலும், இளைஞனின் மரணம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US