பிரித்தானியாவில் இலங்கையரின் மோசமான செயல் - காதலிக்கு நேர்ந்த பரிதாபம்
பிரித்தானியாவில் முன்னாள் காதலியின் வீட்டிற்கு தீ வைத்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள எட்கர் வர்ணகுலசூரிய என்ற இலங்கையர் தனது முன்னாள் காதலியான நட்டாலி கொக்ஸை பின்தொடர்ந்து அவரிடம் மிகவும் மோசமான முறையில் செயற்பட்டுள்ளார்.
கடந்த 24ஆம் திகதி நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வோல்டனில் உள்ள முன்னாள் காதலியின் வீட்டிற்கு சென்ற எட்கர், துரோகி என கூச்சலிட்ட நிலையில் அவரது வீட்டிற்கு தீ வைத்துள்ளார். அதற்காக 10 லைட்டர்களை அவர் பயன்படுத்தியுள்ளார்.
கடந்த ஜுன் மாதம் 20ஆம் திகதி இரவு 10 மணியளவில் நட்டாலி பணி நிறைவு செய்து வீடு திரும்பும் போது, எட்கர் அவரிடம் பேசுவதற்கு முயற்சித்த போதிலும், நட்டாலி அதற்கு அனுமதிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
அடுத்த நாள் பணிக்கு சென்று மாலை வீடு திரும்பும் போது, வீட்டின் பின் பகுதியில் புகை வெளிவந்துள்ளது.. வீட்டினுள் மகன் மாத்திரம் தனியாக இருந்த நிலையில் வீட்டில் தீப்பற்றியதனை நட்டாலி அவதானித்துள்ளார். இதன் போதே முன்னாள் காதலன், தன்னை துரோகி என கூறி வீட்டிற்கு தீ வைத்துள்ளார் என தெரியவந்துள்ளது. உடனடியாக தீப்பரவுவதற்கு முன்னர் தீ அணைக்கப்பட்டுள்ளதென அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையரான எட்கர் வர்ணகுலசூரிய இதற்கு முன்னரும் பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கி சிறை சென்ற ஒருவர் என கூறப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு எட்கர் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்த புகலிடம் கோரியுள்ளார். எனினும் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு நாடு கடத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கு வருவதற்காக பெல்ஜியம் நாட்டு அடையாள ஆவணத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். எனினும் சாரதி அனுமதி பத்திரத்திற்காக விண்ணப்பித்ததற்காக சென்ற போதே அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
போர் காலப்பகுதியில் தமிழ் அமைப்புடன் தொடர்புப்பட்டமையினால் தனக்கு இலங்கை செல்வது பாதுகாப்பில்லை என கூறி பிரித்தானியாவில் தங்கியுள்ளார்.
எனினும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் பல முறை சிறை சென்ற நிலையில் வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டிற்கு மூன்றரை வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.