உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம் தென்னிந்தியாவில்
உலகின் பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை தென்னிந்தியாவில் அமைக்க ஐசிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் அமராவதியில் இந்த மைதானம் அமையவுள்ளதாக ஐசிசி கூறியுள்ளது.
உலகளவில் கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில், உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம் அமராவதியில் அமையவுள்ளது.
நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம்
தற்போது குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட்மைதானம் உலகின் மிகப்பெரிய மைதானமாகக் கருதப்படுகிறது.
இங்கு, ஒரேநேரத்தில் 1,32,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியைக் காணும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தில் உருவாக்கப்பட்டு வரும் அமராவதி நகரில் அதிநவீன வசதிகளுடன், அதை விட பெரிய மைதானத்தை உருவாக்க ஆந்திரா மாநில திட்டமிட்டுள்ளது.
200 ஏக்கர் பரப்பளவில் அமராவதியில் உருவாக உள்ள இந்த விளையாட்டு நகரில், கிரிக்கெட் மைதானத்திற்கு 60 ஏக்கர் ஒதுக்கபப்பட உள்ளது.
ஐசிசி ஒப்புதல்
அமராவதி கிரிக்கெட் மைதானம் தற்போது ஐசிசி இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
இதற்கான செலவை ஆந்திர மாநில அரசு மற்றும் பிசிசிஐ இணைந்து மேற்கொள்ளவுள்ளது.
2029 ஆம் ஆண்டு அமராவதியில் தேசிய விளையாட்டு போட்டிகளை நடத்த உள்ள நிலையில், அதற்கு முன்னர் இந்த மைதானம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
