தடைகளைத் தாண்டி சரித்திரம் படைத்த பெண் ஆளுமை! நினைவுகளில் நீளும் நீதியின் குரல் (Video)
நீதியின் குரலாக திகழ்ந்தவர் அமரர் கௌரி சங்கரி தவராசா.
"இறுதி யுத்தத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை பார்வையிடுவதற்காக சென்ற குழுவினரில் கெளரிசங்கரி தவராசாவும் இருந்தார், அப்போது தன்பாட்டில் அமைதியாக இருந்த சிலரை அவர் வலிந்து வம்புக்கிழுத்து “ஏன் என்னை அவதூறாக பேசினாய்?” என்கிற தொனியில் அந்த கைதிமீது வழக்கு தாக்கல் செய்தார், இப்படி பலர்மீது வழக்குகள் பதியப்பட்டன, இதனால் கொளரிசங்கரியை சிறைச்சாலை வளாகத்தில் கண்டவுடனேயே கைதிகள் முகத்தை திருப்பிக்கொண்டு பயத்துடன் இருந்து விடுவார்கள்.
பின்னர் ஒருநாளில் “ஏன் இப்படி வலிந்து சண்டைக்குச் சென்று அவர்கள்மீது வழக்கு தாக்கல் செய்கிறீர்கள்?” என்று கொளரிசங்கரியிடம் கேட்கப்பட்டது. “இனி அவன் காணாமற் போக மாட்டான், அவன் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது, அவனுக்கு இங்கு ஒரு முகவரி இருக்கிறது”. என்பதே அவருடைய பதிலாக இருந்தது.
அனேகமான தமிழ் தலைமைகள், ஊடகவியளாளர்கள், பொதுமக்கள், ரணில் விக்ரமசிங்க, ராஜித சேனாரத்ன, ரிசாட் பதியுதீன், ஹிஜாஸ் ஜிஸ்புல்லா, குற்றப்பலனாய்வு திணைக்களத்தின் முன்னைநாள் பணிப்பாளர் சானி அபயசேகர போன்ற பலருடைய வழக்குகளை ஜனாதிபதி சட்டத்தரணி கே.வீ தவராசா அவர்களோடு இணைந்து கையாண்ட இந்தப் பெண்மணி கடந்த வருடம் கோவிட் பேரிடர் காலத்தில் இயற்கை எய்தினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கு உட்பட்ட பல வழக்குகளை கையாண்ட இவர்மீது கொலை மிரட்டல்கள்கூட விடுக்கப்பட்டன, பயங்கரவாத சட்டத்தரணிகள் என்று இவர்மீதும் இவருடைய கணவர் கே.வீ தவராசா மீதும் முத்திரை குத்தப்பட்டு அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இப்படி, பல சரித்திரங்களுக்கு சொந்தக்காரரான தனி பெண் ஆளுமையாக திகழ்ந்த கௌரி சங்கரி தவராசா குறித்து ஆராய்கிறது இந்த தொகுப்பு,
