பொதுபல சேனா அமைப்பின் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அமெரிக்கா
பொதுபல சேனா அமைப்பு, இலங்கையில் சிங்கள பௌத்த பெரும்பான்மை மேலாதிக்கத்தை தொடர்ந்து ஊக்குவிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் மதச் சுதந்திரம் தொடர்பான அறிக்கையில் இந்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள பொதுச் சமூக குழுக்களின் கூற்றுப்படி, சிறுபான்மை மதத்தினரை குறிவைத்து சமூக ஊடகங்கள் வெறுப்பு பிரசாரங்களை தூண்டின என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
பொதுபல சேனா போன்ற தேசியவாத குழுக்கள், பெரும்பான்மையினரின் மேலாதிக்கத்தை தொடர்ந்து ஊக்குவித்தன அத்துடன் சிறுபான்மையினரையும் இழிவுபடுத்தின. இந்தநிலையில் முஸ்லீம் மற்றும் தமிழ் சமூகத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவோருக்கு எதிராக இலங்கையின் அதிகாரிகள் செயல்படவில்லை.
2020, மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் இணைய வெறுப்பு உரையை ஆராய்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அறிக்கையின்படி, அனைத்து தேசிய மொழிகளிலும் (சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கிலம்) இணைய வெறுப்பு பேச்சில் 58 சதவீதம் முஸ்லிம்கள் அல்லது இஸ்லாத்துக்கு எதிரானவையாக இருந்தன, 30 சதவீதம் கிறிஸ்தவர்களையும் , மற்றும் 5 சதவீதத்திற்கும் அதிகமானோர் தமிழர்கள் அல்லது இந்து மதத்தைத் தாக்கினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுக்கப்பட்ட சிங்கள மொழி பதிவின்படி 79 சதவீதம் பேர் முஸ்லிம்கள் அல்லது இஸ்லாத்தை தாக்கினர். தமிழ் மொழி இடுகைகளில், 46 சதவீதம் பேர் தமிழ் இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களையும், 35 சதவீதம் பேர் முஸ்லிம்களையோ இஸ்லாத்தையோ தாக்கினர்.
2020 ஜனவரியில் நடந்த ஒரு விசாரணையில், 76 மருத்துவ ஊழியர்கள் பல ஆண்டுகளாக முஸ்லீம் மருத்துவரான சியாப்தீன் ஷாஃபியால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சிங்கள பெண்களின் கட்டாய கருத்தடை பற்றிய அறிவைக் கூறி அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
இதனையடுத்து சந்தேகத்திற்கிடமான முறையில் செல்வத்தை குவித்ததற்காக ஷாஃபி கைது செய்யப்பட்டு 2019 இல் விடுவிக்கப்பட்டார். ஒரு சமூக ஊடகம் அவர் கருத்தடை செய்ததாக குற்றம் சாட்டியதை அடுத்து அவர் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
எவ்வாறாயினும், அவர் மீது எந்தக் குற்றமும் சுமத்தப்படவில்லை. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், முஸ்லிம் வணிகங்களை புறக்கணிக்குமாறு சமூக ஊடகங்களில் அழைப்புக்கள் விடுக்கபட்டன.முஸ்லிம்கள் கொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதாக பொய்யான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம்
செய்ய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக 2020, நவம்பர் 10ஆம் திகதி வெளியான
தகவல்கள் குறித்து கருத்து தெரிவித்த பொதுபல சேனாவின் செயலாளர் கலகோட அத்தே
ஞானசாரா தேரர், "வஹாபி குழுக்கள் சமூகத்தில் ஊடுருவுகின்றன" என்று குற்றம்
சுமத்தியதாக அமெரிக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.