பொது விவாதத்திற்கு வருமாறு சரத்வீரசேகரவிற்கு அழைப்பு விடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பொது விவாதத்திற்கு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி, பொது பாதுகாப்பு துறை அமைச்சர் சரத்வீரசேகரவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இன்று குற்றப்புலனாய்வு துறையில் வாக்குமூலத்தை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தாம் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் கேள்விகளை தொடுக்க வேண்டாம் என்று தாம் இன்று குற்றப்புலனாய்வு துறையிடம் கேட்டு கொண்டதாக ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
தமது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தியே அந்த கருத்துக்களை தாம் வெளியிட்டதாக ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய தற்கொலையாளி ஒருவரை, புலனாய்வு அதிகாரி ஒருவர் சந்தித்ததாக வெளியிட்ட தகவல் தொடர்பிலேயே இன்று ஹரின் விசாரிக்கப்பட்டார்.
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri