யாழில் மதுவுக்கு அடிமையான குடும்பஸ்தருக்கு நேர்ந்த பரிதாப நிலை - செய்திகளின் தொகுப்பு (Video)
யாழ்ப்பாணத்தில் மதுபானத்துக்கு பதிலாக ஒடிக்கொலோனை குடித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் நேற்று (26.09.2022) இவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான காலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,