மூன்றாவது ஈழத்தமிழர் பாதுகாப்பு மகாநாடு

Mullivaikal Remembrance Day India
By Jenitha May 23, 2023 10:45 PM GMT
Report

எதிர்கால இந்துசமுத்திர பிராந்தியத்தில் ஈழத்தமிழரும், இந்தியாவின் பாதுகாப்பும் என்ற தலைப்பிலான மூன்றாவது மாநாடு இந்தியாவின் மும்பை நகரில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் (18/05/2023) நடைபெற்றது.

இனஅழிப்பிக்கு உட்படுத்தப்படுகின்ற ஈழத் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கும், ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், இந்திய அரசினதும் இந்திய மக்களின் ஆதரவை வேண்டியும் இந்தியாவின் மும்பை நகரில் 3வது சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது.

மூன்றாவது ஈழத்தமிழர் பாதுகாப்பு மகாநாடு | The Third Is The Defense Mahanadu Of Tamil Eelam

ஈழத்தமிழர் விடுதலை

இந்த மாநாட்டினை லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் சிறுதுளி (Small Drops) தன்னார்வ தொண்டு நிறுவனமும், மராட்டிய மாநிலத்தின் இந்து இளைஞர் படை (Hindu yuva Prerna) அமைப்பும் இணைந்து நடத்தினர்.

நீண்ட காலமாக ஈழத்தமிழர் விடுதலை பற்றியோ, ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை சார்ந்த அரசியல் பற்றியோ பேச முடியாத சூழ்நிலை ஒன்று இந்தியவில் நிலவியது.

இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் 10 ஆம் திகதி முதலாவது மகாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதனையடுத்து இரண்டாவது மகாநாடு (28.01.2023) டெல்லியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த மண்டபமான அரசியல் சாசன கிளப்பில்(Constitution club of India) நடைபெற்றது.

இம்மகாநாட்டை சிறுதுளி தொண்டு நிறுவன நிறுவனரும், டெல்லி மகாநாட்டு அமைப்பாளருமான பாலநந்தினி(நிலா) அவர்கள் தலைமை தாங்க, தமிழர் நலனுக்கான சமூகநல அறக்கட்டளை அமைப்பின் தலைவர் பெரியசாமி ஒருங்கிணைக்க மகாநாடு சிறப்பாக நடந்தேறியது.

மூன்றாவது ஈழத்தமிழர் பாதுகாப்பு மகாநாடு | The Third Is The Defense Mahanadu Of Tamil Eelam

ஈழத் தமிழருக்கான ஆதரவு வேண்டிய மகாநாடு

இதனைத் தொடர்ந்து தற்போது மும்பையில் ஈழத் தமிழருக்கான ஆதரவு வேண்டிய மகாநாடு நடைபெற்றது.

ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சினை சார்ந்து பல்வேறுபட்ட சாத்தியமான வழிகளை மிக நுணுக்கமாக கையாண்டு இன்றைய உலகளாவிய அரசியல் போக்கு மாற்றத்தினை கவனித்து அதற்கு ஏற்ற வகையில் புலம்பெயர் தமிழர்களையும் தாயகத் தமிழர்களையும் கலந்து கொள்ளும்படி மகாநாட்டு குழுவினரால் பகிரங்க அழைப்பும் விடப்பட்டது.

அதற்கமைய இந்நிகழ்வில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் பலரும் மற்றும் தாயகத்திலிருந்து ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மகாநாட்டுக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் அமைப்புச் செயலாளர் விவேக் தத்கர் வருகை தந்துள்ளார். 

பலர் பங்கேற்பு 

தமிழினப் பற்றுள்ள மராட்டியத்தில் வாழும் தமிழர்களும் தமிழர் நலன் சார்ந்த நபர்களும் அமைப்புகளும் கலந்து கொண்டனர்.

மூன்றாவது ஈழத்தமிழர் பாதுகாப்பு மகாநாடு | The Third Is The Defense Mahanadu Of Tamil Eelam

அத்தோடு இந்தியாவின் ஆளும் கட்சியான விஜேபி கட்சியின் மராட்டிய எம்.எல்.ஏ க்களான மராட்டிய எம்எல்ஏக்களான கணேஷ் நாயக் கேப்டன் தமிழ்ச்செல்வன், நவிமும்பை மாநகராட்சி முதல்வர் இந்திய அரசு சார்ந்த பிரமுகர்களும் இந்திய அரசியலை நிர்ணயம் செய்கின்ற பல்வேறுப்பட்ட அமுக்ககுழுக்களின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டு எதிர்கால இந்து சமுத்திரம் பாதுகாப்பு பற்றியும் பேசினர் என்பதும் இங்கே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாகும்.

நிகழ்வின் தலைமை உரையில் பாலநந்தினி அவர்கள் இந்துசமுத்திர பாதுகாப்பிற்கும், ஈழத்தமிழர் பாதுகாப்பிற்கும், இந்திய தேசிய பாதுகாப்பிற்கும், இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் ஜனநாயக வளர்ச்சிக்கும், விருத்திக்கும் தமிழீழம் அமைவதுதான் சரியான தீர்வாகவும், வழியாகவும், பாதுகாப்பாகவும் அமையும் என வலியுறுத்தி கூறினார்.

இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய மராட்டிய மாநிலத்தின் இந்து இளைஞர் படை அமைப்பின் பொதுச் செயலாளர் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான மத வழிபாட்டு தொடர்புகள், ராமாயண தொடர்புகள் பற்றியும் நிகழ்வில் உரையாற்றினார்.

மூன்றாவது ஈழத்தமிழர் பாதுகாப்பு மகாநாடு | The Third Is The Defense Mahanadu Of Tamil Eelam

இந்து சமுத்திர பிராந்தியத்தின் அதிகாரப்போட்டியும் சீனாவின் இந்து சமுத்திரப் பிரவேசம்

அவரைத் தொடர்ந்து இந்து இளைஞர் படை அமைப்பின் தலைவர்  அரிகரன் அய்யர்  இந்து சமுத்திர பிராந்தியத்தின் அதிகாரப்போட்டியும்  சீனாவின் இந்து சமுத்திரப் பிரவேசம் பற்றியும் அது இந்தியாவின் பாதுகாப்புத் துறை சார்ந்து எவ்வாறு பாதிக்கும் என்பதை பற்றியும் ஹிந்தி மொழியில் விளக்கினார்.

இத்தகைய சூழமைவில் ஈழத் தமிழர்களும் இந்தியாவும் எவ்வாறு இந்து சமூகத்தை பாதுகாக்கலாம் என்பதை பற்றியும், இந்து சமுத்திரத்தை பாதுகாப்பதற்கு ஈழத் தமிழர்கள் இன்றியமையாத சக்தியாக உள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த சமுத்திரத்தில் இந்தியாவினதும் ஈழத் தமிழரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஈழத் தமிழர்களும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், இந்தியக் கடல் வளைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தமிழீழம் என்ற தனியரசு உருவாக்கப்பட வேண்டும்.

இந்தியாவிற்கான பாதுகாப்பு என்பது தமிழீழ உருவாக்கத்திலேயே தங்கியுள்ளது என்றும் அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தி பேசினார்.

இனப்படுகொலை

இம் மாநாட்டிற்காக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி இலங்கைத் தீவிலே 21ம் நூற்றாண்டில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை மீளவும் இலங்கையில் நடைபெறாதிருக்க இந்தியா வழிகோள வேண்டும்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகக் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அந்த முழுமையான அமுலாக்கம் என்பது காணி, பொலிஸ் நிதி அதிகாரங்கள் முழுமையாக உள்ளீர்க்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

அத்துடன் இலங்கையில் சுயநிர்ணய அப்படையிலான தமிழர்கள் தம்மைத் தாமே ஆளுகின்ற அதிகாரம் மிக்க கடல், பொலிஸ், நிதி வளங்களைக் கொண்ட பிராந்தியங்களின் கூட்டு உருவாக்கப்பட வேண்டும்.

மூன்றாவது ஈழத்தமிழர் பாதுகாப்பு மகாநாடு | The Third Is The Defense Mahanadu Of Tamil Eelam

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்ட ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்தாத நாடாக நாங்கள் இலங்கையைக் கருதுகின்றோம். இன்று மாகாணசபைகளின் ஆட்சிக்காலம் நிறைவுற்று கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக மாகாணசபைத் தேர்தல்கள் இதுவரை நடைபெறவில்லை" என்று தெரிவித்தார்.

இது தொடர்பில் நிகழ்வின் ஏற்பாட்டார்கள் கருத்துத் தெரிவிக்கையில், சோழர்கள் கையாண்ட கடல்சார் வியூகங்கள் மூலம் இந்துமா சமுத்திரத்தை ஏறத்தாழ 500 ஆண்டுகள் ஆட்சி செய்தது போன்று மகராஸ்டிரா மாநில சத்ரபதி சிவாஜி அவர்களும் அரேபிய கடல் சார் வியூகங்களை அமைத்ததில் அன்றைய இந்தியாவின் கடல்சார் கொள்கை இந்திய மண்ணை பாதுகாத்தது.

பார்க்க நீரினை இந்தியாவிற்கும் ஈழத் தமிழர்களுக்குமானது. சீனா இதுவரை இந்தியாவின் அணுவாராய்ச்சி மையத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தது. ஆனால் தற்போதைய புவிசார் அரசியல் நகர்வுகளின் மூலம் இன்று இந்தியாவிற்கு தெற்கே இலங்கத் தீவிலே அம்பாந்தோட்டை துறைமுகத்தை பெற்றதன் மூலம் இலங்கைத் தீவில் காலொன்று விட்டது சீன மன்னாரிலே கடலட்டை பண்ணை உட்பட வடக்கிலே இன்னும் பல தீவுகளிலும் காலை ஒன்றி விட்டதனால் இந்தியாவின் உச்சப் பாதுகாப்பு வளையம் வளையத்தை சீனா சில 100 கிலோமீட்டர் களுக்குள் ஆரம்பித்துவிட்டது

இது இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கு பாரதூரமான அச்சுறுத்தலாகவும் அமைந்துவிட்டது. எனவே இந்து சமத்துவத்தை பாதுகாப்பில் ஈழத் தமிழரும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவ்வாறு செயல்படுவதற்கு ஈழத் தமிழர்கள் தமிழக தனியரசை உருவாக்குவதற்கு இந்தியா வழிவகை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

நிகழ்வில் இந்தியாவின் அரசியல் பிரமுகர்களும், இந்துத்துவவாத அமைப்புக்களின் பிரமுகர்களும், இந்திய நிர்வாக மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள். ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் என பல்வேறு பட்ட தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மயிலிட்டி, கொழும்பு

08 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

31 May, 2015
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
3ம், 4ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொழும்பு, Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom, Manchester, United Kingdom, Minneapolis, United States, Winnipeg, Canada, Philadelphia, United States, New Jersey, United States

02 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பிரித்தானியா, United Kingdom

17 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US