போராட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா-செய்திகளின் தொகுப்பு (video)
போராட்டம் முடிவடையவில்லை எனவும், அரசியல்வாதிகள் போராட்டம் முடிந்துவிட்டதாக நினைத்து பொழுதை கழிக்க வேண்டாம் எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அடக்குமுறையை எதிர்கொண்டு போராட்டம் என்ற கருத்தாக்கம் வெளிப்பட்ட நிலையில் அடக்குமுறையால் தற்போது அடக்கப்பட்டாலும் போராட்டம் முடிவடையவில்லை.
போராட்டக் குழந்தைகள் இந்த நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சித்தார்கள்.
இந்த நாட்டில் உள்ள அனைவரும் அந்த குழந்தைகளுக்கு இயன்றவரை உதவ வேண்டும். போராட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும். அதற்கான காலம் எடுக்கும் ” என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,