அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் பிளவு?
அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க தனித்தனியாக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு மாதிவெல எம்.பிக்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த வாரம் பகுதி பகுதியாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த வாரமும் அதற்கு முந்தைய வாரமும் மாதிவெல எம்.பிக்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குழுவைச் சேர்ந்த பலர் தனித்தனியாக ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.