ஆறாம் நிலம் திரைப்படம் ஒரு பேரினத்தின் வலி! - சீமான்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வரும் “ஆறாம் நிலம்”திரைப்படம் எமது ஐபிசி தமிழின் தயாரிப்பில் உருவாகி உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கிய முழுநீளத் திரைப்படமாக உருவாக்கப்பட்டு ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும், துயரங்களையும் வெளிப்படுத்தும் இந்த திரைப்படம் எமது ஐபிசி தமிழின் யூரியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஈழ நிலத்தின் வலியை மொழியெடுத்து திரையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இத்திரைக்காவியம் பெரும் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ்ச்சொந்தங்கள் இத்திரைப்படத்தைக் கொண்டாட வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவொன்றினை இட்டு தமது ஆதரவினை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள பதிவு பின்வருமாறு,
ஆறாம் நிலம் - ஒரு பேரினத்தின் வலி!https://t.co/Wtyocz1hxu
— சீமான் (@SeemanOfficial) September 24, 2021
ஈழ நிலத்தின் வலியை மொழியெடுத்து திரையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இத்திரைக்காவியம் பெரும் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ்ச்சொந்தங்கள் இத்திரைப்படத்தைக் கொண்டாட வேண்டும்.https://t.co/g4bSbjAcFd pic.twitter.com/x68BkQbV5n