நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பினரை பயங்கரவாதிகளென்று அழைத்த ஆளும் கட்சி! இருவர் வெளிநடப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை புலிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் அழைத்தமையால்,வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு கூட்டத்தில் இன்று பதற்றமான சூழ்நிலையொன்று நிலவியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், ஆலோசனைக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலின் சில பிரச்சினைகளை எழுப்ப முயன்றபோதே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்துள்ளதுடன்,மாறாக அவர்களை நோக்கியும் சத்தமிட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களை பயங்கரவாதிகள் என்று அழைத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ .சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாகவும்,இது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவமென்றும், இந்த சபையில் இடம்பெற்ற ஒரு சோகமான தருணம் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தைக்கு ஆளும் கட்சி
உறுப்பினரான சந்திம வீரக்கொடி மட்டுமே எதிர்ப்பை வெளியிட்டார் என்றும்
சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri