உலக சந்தையில் உச்சம் தொட்ட தங்க விலை! இலங்கையில் பதிவாகிய மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.
இதற்கமைய, இன்று வெளியான சந்தை தரவுகளின்படி, நேற்று 4,330 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (03) காலை 4,345 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்
உலக சந்தையில் தங்க விலை மாற்றத்திற்கு ஏற்ப இலங்கையிலும் அடுத்து வரும் நாட்களில் விலை மாற்றம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, இலங்கையிலும் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தங்க விற்பனை
அந்த வகையில் 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 360,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அதற்கமைய, 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 330,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 314,900 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டில் உலக சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 60% அதிகரித்திருந்த நிலையில், தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam