120 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ள பாலின் விலை?
அகில இலங்கை பால் விவசாயிகள் சம்மேளனம் ஒரு லிட்டர் பாலுக்கு குறைந்தபட்சம் 120 ரூபா விலை உயர்வைக் கோரியுள்ளது.
பால் பண்ணையாளர்களை பாதுகாக்கும் தேசிய மைய தலைவர் சுசந்த குமார நவரத்ன (Susantha Kumara Navaratne) இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பால் மா நிறுவனங்களின் உற்பத்திகளுக்கு விலை அதிகரிக்கப்பட்ட பிறகு அவர்களுக்கு கிடைக்கும் லாபம் பால் விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.
பால் மா நிறுவனங்கள் மாத்திரமே அந்த லாபத்தை பெறுகின்றன. பால் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து அந்த நிறுவனங்களுக்கு விளக்கமளிக்கப்படுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், ஒரு லிட்டர் பால் உற்பத்தி செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. கால்நடை மருந்து மற்றும் வேலை சிகிச்சை, தீவனம் மற்றும் தாதுக்களின் விலையும் உயர்ந்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
இந்த சிரமத்தை நாடு முழுவதும் உள்ள 400,000 பால் விவசாயிகள் எதிர்கொள்வதாக நவரத்ன கூறியுள்ளார்.
எனவே, பால் விலையை குறைந்தபட்சம் 120 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என நவரத்ன கோரியுள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 13 மணி நேரம் முன்
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri