120 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ள பாலின் விலை?
அகில இலங்கை பால் விவசாயிகள் சம்மேளனம் ஒரு லிட்டர் பாலுக்கு குறைந்தபட்சம் 120 ரூபா விலை உயர்வைக் கோரியுள்ளது.
பால் பண்ணையாளர்களை பாதுகாக்கும் தேசிய மைய தலைவர் சுசந்த குமார நவரத்ன (Susantha Kumara Navaratne) இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பால் மா நிறுவனங்களின் உற்பத்திகளுக்கு விலை அதிகரிக்கப்பட்ட பிறகு அவர்களுக்கு கிடைக்கும் லாபம் பால் விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.
பால் மா நிறுவனங்கள் மாத்திரமே அந்த லாபத்தை பெறுகின்றன. பால் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து அந்த நிறுவனங்களுக்கு விளக்கமளிக்கப்படுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், ஒரு லிட்டர் பால் உற்பத்தி செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. கால்நடை மருந்து மற்றும் வேலை சிகிச்சை, தீவனம் மற்றும் தாதுக்களின் விலையும் உயர்ந்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
இந்த சிரமத்தை நாடு முழுவதும் உள்ள 400,000 பால் விவசாயிகள் எதிர்கொள்வதாக நவரத்ன கூறியுள்ளார்.
எனவே, பால் விலையை குறைந்தபட்சம் 120 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என நவரத்ன கோரியுள்ளார்.
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam