ஜனாதிபதி புலம்பெயர் தமிழரிடம் மன்னிப்பு கோர வேண்டும்! சபையில் கொந்தளித்த சாணக்கியன்(Video)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புலம்பெயர் தமிழரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் நேற்றைய தினம்(01.07.2023) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கோர வேண்டும்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“பிரான்ஸ் நாட்டில் ஜனாதிபதி இருக்கும் போது அங்குள்ள புலம்பெயர் தமிழர் ஒருவர் ஆங்கிலத்தில் வைத்த எமது இன அழிப்பு பற்றிய கேள்விக்கு விடையளிக்க விரும்பாமல் தனக்கு விளங்கவில்லை என கூறினார்.
மேலும் ஆங்கிலம் தெரியாவிடின் தமிழில் கதைக்கும் படியும் கூறி இருந்தார். ஆங்கிலம் தெரியாவிடின் அது ஓர் பாரிய குற்றம் போல் சாடியிருந்தார்.
அந்த புலம்பெயந்தவர் ஜனாதிபதி 80 களில் அமைச்சரவை அமைச்சராக இருந்த காலத்தில் அச்சுறுத்தல் காரணமாக விரட்டி அடிக்கப்பட்டு புலம்பெயர்ந்து இருக்கலாம்.
ஜனாதிபதியின் இந்த கருத்து தொடர்பில் புலம்பெயர் தேசத்தவரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.”என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |