அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட தயாராகும் கோட்டபாய
அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட தான் விருப்பத்துடன் இருப்பதாக சமகால ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டபாய, கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகள் மூலம் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலிலும் தான் போட்டியிடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.