இலங்கை உர நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்க மறுத்த முக்கியஸ்தர்
பணி நீக்கப்பட்ட மில்கோ நிறுவனத்தின் தலைவர், இலங்கை உர நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்க மறுத்துள்ளார்.
மில்கோ நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றி வந்த லசந்த விக்ரமசிங்க, இவ்வாறு தமக்கு வழங்கப்பட்ட பதவியை நிராகரித்துள்ளார்.
இலங்கை உர நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கு நியமிப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் டி.எஸ்.ஆடிகல கடிதம் ஒன்றை தமக்கு அனுப்பி வைத்துள்ளதாக லசந்த குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள முடியாது என தாம் கடிதம் மூலம் நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.