தீவிரமடையும் பட்டலந்த வதை முகாம் விவகாரம்! சிக்கலில் ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan political crisis Batalanda commission Report
By Chandramathi Mar 11, 2025 02:59 AM GMT
Chandramathi

Chandramathi

in அரசியல்
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அல்ஜசீரா செய்தி சேவைக்கு வழங்கப்பட்ட நேர்காணல் மற்றும் அதில் முக்கியமாக பேசப்பட்ட பட்டலந்த விவகாரமும் தற்போது நாட்டில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது என இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார தெரிவித்துள்ளார்.

முறைப்பாடு

இதனை அடிப்படையாகக் கொண்டு உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினால் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிரமடையும் பட்டலந்த வதை முகாம் விவகாரம்! சிக்கலில் ரணில் | The Pattalanda Torture Camp

அத்துடன் பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் வெளியிடப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்தில் இந்த அமைப்பினால் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

பட்டலந்த விவகாரம் 

இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ''நாட்டை ஆட்சி செய்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அல்ஜசீரா நேர்காணலின்போது ஊடகவியலாளர் பட்டலந்த விவகாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆணைக்குழுவின் அறிக்கை எங்கு என வினவினார். நாடாளுமன்றத்தில் எங்கு சமர்பிக்கப்பட்டது என வினவினார். அத்துடன் அந்த ஊடகவியலாளர் அந்த அறிக்கையை காண்பித்தார்.


இந்த சம்பவம் இடம்பெற்று பல வருடங்கள் கடந்துள்ள நிலையில் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவதற்கு இந்த விடயத்தை பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டத்தை உருவாக்கவில்லை.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய நீதியை இப்போதுள்ள அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.'' என கூறியுள்ளார்.

உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல் கொண்ட நாடாகிய இலங்கை

உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல் கொண்ட நாடாகிய இலங்கை

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US