ஆடைகளை திருடியவர் நையப்புடைக்கப்பட்டார்! (Video)
வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையங்களில் ஆடைகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேகநபர் தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றில் ஆடைகளை திருடியபோது அவரை சுற்றிவளைத்த இளைஞர்கள் அவரது கைகளை கட்டிநையப்புடைத்ததுடன், பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.