கோவிட் தொற்றால் பிரேமதாச மைதானத்தின் ஊடக அறை மூடப்பட்டுள்ளது
இலங்கை, இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது 20க்கு 20 போட்டியின் போது, ஆர். பிரேமதாச மைதானத்தின் ஊடக அறை மூடப்பட்டுள்ளது.
அதில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் கோவிட் தொற்றுடன் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த அறை மூடப்பட்டுள்ளது.
போட்டி ஆரம்பமாவதற்கு சற்று முன்னர், நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையின் போது அவர் தொற்றாளராக கண்டறியப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20க்கு 20 போட்டியின் போது சுகாதார அனுமதியின் படி ஊடக அறை மீண்டும் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.