சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியின் ஆரம்ப விழா!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீன ஜனாதிபதி ஜின்பிங் மற்றும் பிற அரச தலைவர்கள் இன்று மாலை காணொளி மூலம் உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியின் ஆரம்ப விழாவில் உரையாற்றியுள்ளனர்.
வாய்ப்புகளை பகிர்ந்துக்கொள்ளல்
நிகழ்ச்சியில் உரையாற்றிய சீன ஜனாதிபதி ஜின்பிங், சீனா தனது பரந்த சந்தையில் வாய்ப்புகளை பகிர்ந்துக்கொள்ள அனைத்து நாடுகளுடனும், கட்சிகளுடனும் இணைந்து செயல்படும் என்று கூறியுள்ளார்.

ஒரு வலுவான உள்நாட்டு சந்தையை வளர்ப்பதற்கும், பொருட்களின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும், சேவைகளில் வர்த்தகத்திற்கான புதிய வழிமுறைகளை உருவாக்குவதற்கும், மேலும் தரமான தயாரிப்புகளை இறக்குமதி செய்வதற்கும் முயற்சிகளை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தகத்தில் புதுமைகளை ஊக்குவிக்கவும், உயர்தர பட்டுப்பாதை ஒத்துழைப்பை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார உறவுகளை மேம்படுத்தல்

இதற்கிடையில், வளரும் நாடுகளுக்கு சீன சந்தையில் நுழைவதற்கு சீன சர்வதேச
இறக்குமதி கண்காட்சி புதிய மற்றும் புதுமையான கட்டத்தை வழங்கியுள்ளது என்று
ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள்
எதிர்காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு பொருளாதார உறவுகளை மேலும்
மேம்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் விக்கிரமசிங்க
கூறினார்.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 16 மணி நேரம் முன்
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan