ஏழை நாடுகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜோ பைடன்
உலகம் முழுவதும் மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில் பல்வேறு நாடுகளில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,அமெரிக்கா அரை பில்லியன் புதிய ஃபைசர் தடுப்பூசிகளை வாங்கி, உலகின் குறைந்த நடுத்தரமான வருமானத்தைக் கொண்ட நாடுகளுக்கு நன்கொடையாக அளிக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளதாவது,
பல ஏழை நாடுகள் தடுப்பூசி வாங்க முடியாமல் திணறி வருகின்றன. அமெரிக்கா ஏற்கனவே 8 கோடி தடுப்பூசிகளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஏழை நாடுகளுக்கு உதவும் வகையில், 50 கோடி பைசர் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இந்த வரலாற்று நடவடிக்கை கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ், தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri