பெரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுவினரை மடக்கிப் பிடித்த களுவாஞ்சிகுடி பொலிஸார் (Photos)

Sri Lanka Police Ampara Batticaloa
By Rusath Jan 19, 2023 10:43 AM GMT
Report

மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் பெரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுவினரை களுவாஞ்சிகுடி பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளதாக இன்று (19.01.2023) தெரிவித்தனர்.

கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து 54 பவுண் தங்க நகைகளும், 10 இலட்சம் ரூபா பணமும் களவாடப்பட்டிருந்தது.

இது குறித்து, தீவிர விசாரணைககளையும், தேடுதல்களையும் களுவாஞ்சிகுடி பொலிஸார் முடுக்கி விட்டிருந்த நிலையில், கடந்த 16.01.2023 அன்று அதிகாலை வேளையில் மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடம் பகுதியில் வைத்து பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

பெரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுவினரை மடக்கிப் பிடித்த களுவாஞ்சிகுடி பொலிஸார் (Photos) | The Group Involved In Major Robberies

கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது  

அவரிடமிருந்த கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேலும் 3 ஆண்களும் 1 பெண்ணுமாக மொத்தம் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தற்போது கொச்சிக்கடையில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேகநபர்கள் ஏறாவூரைச் சேர்ந்தவர்கள் எனவும், நான்காவது சந்தேக நபர் களுவாஞ்சிகுடியில் பிரபல வர்த்தகத்தில் ஈடுபடும் பெண் ஒருவரின் மகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐந்தாவது சந்தேக நபர் கொழும்பைச் சேர்ந்த நகைத் தொழிலில் ஈடுபடுபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் மணப் பெண் அலங்காரம் பெய்து வருபவர் எனவும், தாம் அலங்காரம் செய்யும் பெண்களிடம் குறித்த கொள்ளையர்களை அனுப்பி இவ்வாறு களவுகளில் ஈடுபடச் செய்து வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுவினரை மடக்கிப் பிடித்த களுவாஞ்சிகுடி பொலிஸார் (Photos) | The Group Involved In Major Robberies

பொலிஸ் விசாரணை

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெருந்த தொகையான பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் அமெரிக்க தயாரிப்பிலான என்.61171 வர்க்க கைத் துப்ப்பாக்கி ஒன்று அமெரிக்க தயாரிப்பிலான 7.65 மில்லி மீட்டர் அளவிலான 3 தோட்டாக்கள், வெளிநாட்டு தயாரிப்பிலான எவ்.ஆர்.ஏ.ஜி.எஸ்.எவ்-87 ரக கைக்குண்டு ஒன்று, இரவு நேரத்தில் களவுகளுக்காக பயன்படுத்ததும் இருப்புக் கம்பி ஒன்று, போலி இலக்கத்தகடு கொண்ட ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று, கையடக்கத் தொலைபேசிகள், 120 கிராம் உருக்கப்பட்ட தங்கக் கட்டி, தங்க மாலை ஒன்று மற்றும் குறடு, ஸ்கூட்றைவர், உள்ளிட்ட பல பொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இவ்வாறு  16.01.2023 அன்று கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவின் பெயரில் இரண்டு நாட்கள் பொலிஸ் தடுப்பு விசாரணையில் வைக்கப்பட்டு மீண்டும் புதன்கிழமை (18.01.2023) களுவாஞ்சிகுடி நீதவான் நீதி நீதிமன்றில் முன்னிலைப் படத்தப்பட்டு, பின்னர் எதிர்வரும் 31.01.2023 வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பெரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுவினரை மடக்கிப் பிடித்த களுவாஞ்சிகுடி பொலிஸார் (Photos) | The Group Involved In Major Robberies

களுவாஞ்சிகுடி பொலிஸ் 

கைது செய்யப்பட்ட இக்குழு கடந்த வருடம் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள நீதிபதி ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம், உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தெரியவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குறித்த குழு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் இனிமேல் அச்சமின்றி நடமாட முடியும் எனவும் இதன்போது பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பெரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுவினரை மடக்கிப் பிடித்த களுவாஞ்சிகுடி பொலிஸார் (Photos) | The Group Involved In Major Robberies

மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US