மாயைகளின் பின்னால் சென்ற அரசாங்கம்! பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள விளைவு
அரசாங்கம் மாயைகளின் பின்னால் சென்றதே இலங்கையின் இன்றைய நிலைக்குக் காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றின் மூன்றாவது அலைக்கு முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் எடுத்த தவறான நடவடிக்கைகளின் விளைவினை மக்கள் எதிர்கொள்கின்றனர்.
வைரஸ் தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு தயாராகாமல் பல்வேறு பானிகளை அருந்துதல் பல மாயைகளை பின்பற்றுதல் போன்றவற்றை அரசாங்கம் ஊக்குவித்தமையே இன்றைய நிலைக்குக் காரணம் எனவும் மரிக்கார் தெரிவித்துள்ளார்.