துதிப் பாடிக் கொண்டிருந்த அரசாங்கம் பாதாளத்திற்கு விழும் வரை தெரியாமல் போகும்! பந்துல குணவர்தன
தற்போதைய அரசாங்கத்திற்கு துதிப் பாடிக் கொண்டு சென்றால், அதளபாதாளத்திற்குள் விழும் வரை தெரியாமல் போகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் தான் உட்பட மக்களின் பிரதிநிதிகளுக்கு வழங்க வேண்டிய நிறுவனங்கள் மற்றும் அமைச்சு பொறுப்புகள் பற்றி தீர்மானிப்பது வெளியில் இருக்கும் சில அதிகாரிகள் எனவும் அவர் கூறியுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
2015ஆம் ஆண்டு தெரிவான நல்லாட்சி அரசாங்கத்திலும் இதுவே நடந்தது.
அரசாங்கம் வீழ்ச்சியடைய இடமளிக்காது, இதனை சுட்டிக்காட்டுவது தனது கடமை எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.