பொதுமக்களின் நலனை பேணுவதில் தவறிய அரசாங்கம் - ருவான் விஜேவர்தன
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்வுக்கு பதிலாக பொதுமக்களுக்கு உடனடியாக நிதி நிவாரணம் வழங்குமாறு ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையை அதிகரிப்பதன் மூலம் தொற்றுநோய்களின் போது அரசாங்கம் பொதுமக்களின் நலனை பேணுவதில் தவறிவிட்டது என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தியது, இது உலகளாவிய விலையின் அடிப்படையில் பெட்ரோல் விலையை ஒழுங்குபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டது.
இருப்பினும்,அந்த விலை சூத்திரத்தை நடைமுறை அரசாங்கம் நீக்கிவிட்டதன் காரணமாக, கடந்த ஆண்டு உலகளாவிய எரிபொருள் விலை பாரிய அளவில் குறைந்தபோது அதன் நன்மைகள் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை.
நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட ஆண்டு அறிக்கையின்படி, உலகளாவிய எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் காரணமாக அரசாங்கம் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை மிச்சப்படுத்தியது.
எனினும் இந்த நன்மை அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை" என்று ருவான் விஜயவர்தன கூறினார். கடந்த ஆண்டில், கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, இலங்கை பொதுமக்கள் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டனர்.
இந்த அரசாங்கம் உலகளாவிய விலைகளுக்கு ஏற்ப பெட்ரோல் விலையை குறைக்க தவறியதால், இந்த சுமைகள் குறைக்கப்படவில்லை இந்தநிலையில் கடந்த ஆண்டு உலகளாவிய எரிபொருள் விலை குறைப்பினால் கிடைத்த நிதிச் சேமிப்புகளைப் பயன்படுத்தி அரசாங்கம், தற்போது பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என விஜேவர்தன அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தார்.
அரசாங்கத்தால் பெறப்பட்ட சேமிப்பைக் கொண்டு நாட்டின் சிரேஷ்ட குடிமகன்
ஒருவருக்கு 14,000 ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டும் என ருவான் விஜயவர்தன
கோரிக்கை விடுத்துள்ளார்.